Thursday, January 29, 2009

கல்யாணப் பெண்!

மேல தாளம் முழங்குகிறது,
குளித்து புத்தாடை உடுத்தி,
பூ மாலையிட்டு அமர்கிறாள்.
சென்ற வாரம் தான் சந்தைக்கு வந்த,
புதுக் காட்சிப் பொருள்,
கடும் போட்டிகளுக்கு இடையே,
நல்ல விலை கொடுத்து விற்றார்களாம்
கல்யாண சந்தையில்.

1 comment:

  1. //நல்ல விலை கொடுத்து விற்றார்களாம்
    கல்யாண சந்தையில்//


    நாம் விலையும் கொடுத்து நம் பெண்ணையும் கொடுப்பது,இங்கே நடக்கும் ஓர் சமுதாய சீர்கேடு.....அவசியம் மாற்றப் பட வேண்டிய ஒன்று.......

    ReplyDelete